• தொடர்புகொள்ள
Wednesday, January 27, 2021
‘ஏசுவார்கள், எரிப்பார்கள்
அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’
எழுவானம்
உங்கள் முதுகுக்கு பின்னால்
நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள்
கவனத்திற்கு மட்டும்..
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
எழுவானம்
No Result
View All Result

வௌ்ளை வான் கடத்தல்: சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த இருவருக்கு பிடியாணை!!

admin by admin
June 26, 2020
in இலங்கை
0
வௌ்ளை வான் கடத்தல்: சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த இருவருக்கு பிடியாணை!!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

வௌ்ளை வேன் கடத்தல் தொடர்பில் சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடயத்துடன் தொடர்புடைய வழக்கு, இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு சந்தேகநபர்களும் வேறொரு கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் எனினும், அதனை திட்டவட்டமாக உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவர் சார்பிலும் சட்டத்தரணிகள் யாரும் ஆஜராகதமை தொடர்பில் கவனம் செலுத்திய மேலதிக நீதவான், பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளினால் பதிவு செய்யப்பட்ட சாட்சிகள் தமது திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்த வழக்கின் மூன்றாம் மற்றும் நான்காம் சந்தேகநபர்களாக பெயிரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் மொஹமட் ரூமி ஆகியோர் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Previous Post

கோவிலுக்குள் புகுந்த திருடர்கள்: சிலைகளையும் நகைகளையும் அள்ளிச் சென்றனர்!!!

Next Post

வெலிக்கடை சிறைச்சாலையில் வீசப்பட்ட பொதியால் பரபரப்பு!!

Next Post
வெலிக்கடை சிறைச்சாலையில் வீசப்பட்ட பொதியால் பரபரப்பு!!

வெலிக்கடை சிறைச்சாலையில் வீசப்பட்ட பொதியால் பரபரப்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

முகநூல்

  • தொடர்புகொள்ள

© 2019 நெருப்பின்குரல்

No Result
View All Result

© 2019 நெருப்பின்குரல்