புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு யார், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பில்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் புதுவகையான குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய அரசாங்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைந்து கொள்ளவேண்டும் என பெரமுனவின் வேட்பாளரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதனால், பெரமுனவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்துள்ள விமல் வீரவன்ச, யாரும் தேவையில்லை. தனியே ஆட்சியமைப்போம் என கூறியதுடன்,ரணில், சஜித்தை விடவும் ஆகக் கூடுதலான வாக்குகளை இம்முறை நான் பெறுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.