சிங்கள இராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
22 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கிருலப்பனை-பொல்ஹென்கொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது கடமைநேர துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட இராணுவவீரர், தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.