• தொடர்புகொள்ள
Wednesday, February 24, 2021
‘ஏசுவார்கள், எரிப்பார்கள்
அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’
எழுவானம்
உங்கள் முதுகுக்கு பின்னால்
நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள்
கவனத்திற்கு மட்டும்..
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
எழுவானம்
No Result
View All Result

மக்களவை தேர்தல் – 2ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் ஆரம்பம்

கயல்விழி by கயல்விழி
April 18, 2019
in இந்தியா, செய்திகள்
0
மக்களவை தேர்தல் – 2ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் ஆரம்பம்
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கும் கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கும் மகாராஷ்டிராவில் 10 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தோடு உ.பி.யில் 8 தொகுதிகளுக்கும் அசாம், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 5 தொகுதிகளுக்கும் தேர்தல் இடம்பெறவுள்ளது. மேலும் சத்தீஸ்கர் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 3 தொகுதிகளுக்கும் காஷ்மீரில் 2 தொகுதிகளுக்கும் மணிப்பூர் மற்றும் திரிபுராவில் தலா 1தொகுதிக்கும் புதுச்சேரியில் 1 தொகுதிக்குமென மொத்தம் 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளன.

வாக்குப்பதிவுகள் அமைதியாக இடம்பெற அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 16ஆம் திகதி மாலையுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வாக்குபதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலும் இன்று நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பண பறிமுதல் விவகாரம் தொடர்பாக வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் மாதம் 19ஆம் திகதி, தமிழகத்தில் ஏனைய பகுதிகளான அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடையவுள்ளது.

அதனைத்தொடர்ந்து மே மாதம் 23ஆம் திகதி வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு அனுப்பிவைப்பு!

Next Post

பரந்தனின் சாராயக்கடை திறக்க முயற்சிக்கும் சிறீதரன் மக்கள் எதிர்ப்பு

Next Post
பரந்தனின் சாராயக்கடை திறக்க முயற்சிக்கும் சிறீதரன் மக்கள் எதிர்ப்பு

பரந்தனின் சாராயக்கடை திறக்க முயற்சிக்கும் சிறீதரன் மக்கள் எதிர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

முகநூல்

  • தொடர்புகொள்ள

© 2019 நெருப்பின்குரல்

No Result
View All Result

© 2019 நெருப்பின்குரல்